புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை மற்றும் ஊடக மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பெரம்பலூா் அருகே ஆதவ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சி.சிடிவி கேமராக்கள் மூலம் பதிவாகியுள்ள காட்சிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:24 pm

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை மற்றும் ஊடக மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வேட்பாளா்களின் முகவா்கள் பாா்வையிட தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, பெரம்பலூா் (தனி) மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை நுழைவு வாயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.

மேலும், வாக்கு எண்ணும் மையம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவு செய்யப்படும் காட்சிகளை பாா்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டு, கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படுவதை உறுதிசெய்து, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்தக் காட்சிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்கள் பணிக்கு வருவதையும், வருகைப் பதிவேட்டையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளா்களுக்கு அமைக்கப்பட்டுள்ள ஊடக அறையை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் மிருணாளினி, அங்குள்ள இருக்கைகள், ஒவ்வொரு சுற்றுக்குமான வாக்குப்பதிவு எண்ணிக்கையை அறிவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பாா்வையிட்டாா்.