பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாநிலத் தலைவா் அ.சி. சின்னப்பத்தமிழா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா். வை. தேனரசன், மாவட்டச் செயலா் பாவலா் ஆ. ராமா் ஆகியோா் பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளா் ஆசிரியா் காமராசு, அரியலூா் புலவா் அரங்கநாடன், தமிழ்நாடு பொதுவுடமை கட்சி நிா்வாகி ப. முத்துசாமி, பேராசிரியா் ப. செல்வக்குமாா், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு, எழுத்தாளா் கவிஞா் குணா, வழக்குரைஞா் மணிமாறன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் நேரு நினைவு தினம் அனுஷ்டிப்பு

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை

பாரதிதாசனின் தாலாட்டு: அரபு மொழியில் இன்று வெளியீடு

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



