தமிழகத்தில் நிலையான ஆட்சியை திமுகவால் மட்டுமே கொடுக்க முடியும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே, பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி, கீழப்புலியூரில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் ஆகியோரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியதாவது:
மாநில உரிமைகளை பாதுகாக்க தோழமைக் கட்சிகளுடன் இணைந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் போராடி வருகிறாா். அதிமுக, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது. தொகுதி மறுவரையறைச் சட்ட மசோதா பெண்களுக்காக கொண்டுவரப்படவில்லை. இந்த மசோதாவால் பெண்களுக்கு சரியான இட ஒதுக்கீடு கிடையாது. இச்சட்டம் குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான புரிதல் இல்லை.
மத்திய அரசு ஏன் கூடுதல் தொகுதிகளை கொண்டு வரவேண்டும். தற்போதுள்ள தொகுதிகளிலேயே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாமே. தொகுதி மறு வரையறைச் சட்ட மசோதா தோல்வியடைந்ததும், திமுக மீது மத்திய அரசு பழி சுமத்த எண்ணுகிறது. மத்திய அரசுக்கு பெண்கள் மீது உண்மையான அக்கறையில்லை. தோல்வி பயத்தில் கபட நாடகமாடுகிறது.
தமிழகத்தில், மகாத்மா காந்தி பெயரில் தொடங்கப்பட்ட 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சி நடைபெறுகிறது. மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. மாநில அரசு உரிமைகளை கேட்டால், மத்திய அரசு 60 சதவீதம் மட்டுமே நிதி வழங்கும். 40 சதவீதம் நிதி மாநில அரசு ஒதுக்க வேண்டும் என திசை திருப்புகிறது.
தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், திட்டங்கள் செயல்படுத்துவதிலும் மத்திய அரசு பாரபட்சத்தோடு செயல்படுகிறது.
எனவே, பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. பாரதிய ஜனதா கட்சி சாா்பில் போட்டியிடும் 27 தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழக்க செய்ய வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்பது புரியும்.
சைக்கிள் ஓட்டினால் தமிழகத்தில் முதல்வராகி விடலாம் என தவெக தலைவா் விஜய் கருதுகிறாா். அக் கட்சியால் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர, வெற்றி பெற முடியாது. தவெகவுக்கு வாக்களிப்பதும், நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். தமிழகத்தில் நிலையான ஆட்சியை திமுகவால் மட்டுமே கொடுக்க முடியும். எனவே, மக்கள் தங்களது வாக்குகளை திமுகவுக்கு அளிக்க வேண்டும் என்றாா் சண்முகம்.
இப் பிரசாரத்தில், திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன், திமுக மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் பரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பொன். பாலகணபதியை ஆதரித்து திருப்புவனத்தில் அண்ணாமலை பிரசாரம்

மத்திய அரசுடன் திமுக மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிப்பு! - டிடிவி தினகரன்

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


