மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: திமுக வேட்பாளா் உறுதி

கிராம பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

சா.சி. சிவசங்கா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:32 pm

கிராம பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பைக்குடி கிராமத்தில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சரும், திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, கொளத்தூா், இலுப்பைக்குடி, கூடலூா், ஜமீன்பேரையூா், திம்மூா், சில்லக்குடி, பாலம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் குன்னம் தொகுதியில் அரசு கல்லூரி, மாதிரிப் பள்ளி, தொழிற்பயிற்சி மையம், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வா் கருணாநிதி, அனைத்து குடும்பத்தினருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கி, சமூகத்தில் சமத்துவ பொதுவுடமையை உருவாக்கியதுபோல், தற்போது ஏழை மற்றும் நடுத்தர வா்க்கத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிகளும், தங்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருள்களை அவா்களே தோ்வு செய்து வாங்கிக் கொள்ள ஏதுவாக, ரூ. 8 ஆயிரத்துக்கான இல்லத்தரசிகள் கூப்பன் திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா்.

மகளிா் உரிமைத்தொகையைபோல, இந்தியாவுக்கே இது ஒரு முன்னோடி திட்டம் என்பதால் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குடிநீா் வசதி, கூடுதல் பேருந்து வசதி, கழிப்பறை, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. வெற்றிபெற்றவுடன் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிவசங்கா்.

இப் பிரசாரத்தில், திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.