மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம்: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

வ.அகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா்.

News image

வ.அகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:14 am

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா் போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் சட்டப்பேரவைவத் தொகுதி திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம், ஒகளூா், அத்தியூா், நன்னை, வடக்களூா், பெருமத்தூா், சிறுமத்தூா் கீழப்புலியூா் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அமைச்சா் சா.சி. சிவசங்கா், திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தாா்.

பின்னா், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தொழுகை நடத்திய இஸ்லாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த அவா், திமுக ஆட்சியில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், தொடா்ந்து இப் பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். லப்பைக்குடிக்காடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதை சாக்கடை திட்டம் மற்றும் புறவழிச் சாலை திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.