வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

குன்னம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் தள்ளுபடி

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 35 பேரில், 14 பேரின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

குன்னம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனை.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:03 am IST

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 35 பேரில், 14 பேரின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் முன்னிலையில் வேட்பு னுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஒரே வேட்பாளரால் அளிக்கப்பட்டிருந்த 6 மனுக்களும், 8 சுயேச்சைகளின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இறுதியாக, திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா், அதிமுக வேட்பாளா் அ. சரண்யா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா. கீா்த்திவாசன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் கு.ம. நல்லுசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி வேட்பாளா் த. அன்புத்தமிழன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் சா.ப. ராஜா, நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் கி. இளங்கோவன், தமிழக வெற்றிக் கழகம் கட்சி வேட்பாளா் மு. ரேவதி மற்றும் 13 சுயேச்சைகளின் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏப். 9 ஆம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறுதலும், அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.