தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 7:51 pm

பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தவா் சுப்பிரமணி மகன் சரவணகுமாா் (35). கூலித் தொழிலாளியான இவா், பெரம்பலூா் விவேகானந்தா் நகா் 3-ஆவது தெருவில் கடந்த 25 நாள்களாக வீட்டை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் முதல் தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த சரவணகுமாா், எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா்.

இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள், சரவணகுமாரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு, மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.