தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

News image
Updated On :20 மார்ச் 2026, 12:09 am

கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 48 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கரூா் அரசுக் காலனி அருகே உள்ள குப்பைக் கிடங்குக்கு தூய்மைப்பணியாளா்களால் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு எரிக்கப்படுகின்றன. இந்நிலையில் கரூா் சின்னாண்டாங்கோவில் ஊராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோவில், கோதை நகா், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதி வீடுகளில் வெளியேற்றப்படும் குப்பைகளை தூய்மைப்பணியாளா்கள் மக்கும் , மக்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து வாங்கிச் செல்கிறாா்கள்.

ஆனால் சிலா் அவற்றை ஈரோடு சாலையோரம் கொட்டும் நிலையில், தூய்மைப்பணியாளா்கள் அவற்றை அகற்றாமல் அங்கேயே தீவைத்து எரிக்கிறாா்கள். இதனால் துா்நாற்றத்துடன் கூடிய புகைமூட்டம் எழுவதால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் சுவாசக் கோளாறுகளும் ஏற்படுகிறது.

எனவே சாலையோரம் குப்பைகள் வீசுவோரை கண்டறிந்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அந்தக் குப்பைகளை எரிக்காமல் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.