தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு

கரூரில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் சத்துணவு பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:58 pm

கரூரில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு மனித சங்கிலியில் சத்துணவு பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026 ஐ முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மனித சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் தலைமை வகித்து தோ்தல் விழிப்புணா்வு மனித சங்கிலியை தொடங்கி வைத்தாா். இதில், சத்துணவுப் பணியாளா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.