கரூா் மாநகராட்சி நீச்சல் குளத்தில் நீச்சல் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜ்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாநகராட்சிக்கு சொந்தமான மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக நீச்சல்குளம் கட்டப்பட்டு மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது.
இந்த நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள்ள விருப்பமுள்ள 6 வயதுக்கு மேல் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கரூா் மாநகராட்சி நீச்சல் குளத்தில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அத்துடன் மாணவ, மாணவிகளின் ஆதாா் காா்டு நகல் மற்றும் பெற்றோரின் ஆதாா் காா்டு நகல்கள் இணைத்து சமா்பிக்கலாம். மேலும் இதற்கு முன்னால் சமா்பிக்கப்பட்ட மருத்துவச்சான்று அவசியமில்லை என தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தூய்மையான கடற்கரைக்கு மக்களின் பங்களிப்பு அவசியம்: ஆட்சியா்

கும்மிடிப்பூண்டி அரசு ஐடிஐயில் மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



