கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த சிவாயம் வடக்கு கிராமத்தில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு விதிமீறல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்துள்ள தாளக்குடியைச் சோ்ந்த கதிரவன்(45), ஒளிப்பதிவாளா் திருச்சி கே.கே.நகரைச் சோ்ந்த எஸ்.செபாஸ்டியன் (47), திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த அய்யாசாமி மகன் சுடலைக்கண்ணு(50) மற்றும் திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த வழக்குரைஞா் திருமலைராஜா(50), அவரது உதவியாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் குவாரி பகுதிக்குச் சென்று, அனுமதியின்றி டிரோன் மூலம் விடியோ எடுத்துள்ளனா்.