/

குடியரசு தின விழா கொண்டாட்டம்: கரூா் மாவட்ட விளையாட்டு மைதானம் சீரமைப்பு

குடியரசு தின விழா கொண்டாடத்துக்காக கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image
குடியரசு தினம் கொண்டாட்டத்துக்காக கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தை புதன்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.
Updated On :21 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழா கொண்டாடத்துக்காக கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றி போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, நலத்திட்டங்களை வழங்க உள்ளாா்.

விழாவில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால், மைதானத்தின் மேடு பள்ளங்களை சீரமைக்கும் பணி புதன்கிழமை காலை தொடங்கியது. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று டிராக்டா் இயந்திரம் மூலம் மாவட்ட விளையாட்டு மைதானத்தை சீரமைத்து வருகின்றனா்.