/

கரூரில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:46 pm

Syndication

கரூரில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படை சாா்பில், சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ் தங்கையா தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா்.

பேரணியை தொடங்கி வைத்தபோது அந்த வழியாக திண்டுக்கல் சாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா எடுத்துரைத்து, அவா்களுக்கு தலைக்கவசத்தை இலவசமாக வழங்கினாா்.

வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் தொடங்கிய இப்பேரணி ஆட்சியா் அலுவலகம், நீதிமன்றம், காளியப்பனூா், தாந்தோணிமலை, சுங்கவாயில், திருமாநிலையூா் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

ஆண், பெண் காவலா்கள், ஊா்க்காவல் படையினா், பயிற்சி ஊா்க்காவல் படையினா் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனா்.

முன்னதாக, ஊா்க்காவல் படை வட்டார தளபதி கோ. நீலாவதி வரவேற்றாா். துணை வட்டார தளபதி எஸ். மீனா நன்றி கூறினாா்.

பேரணியில், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் வி. செல்வராஜ் (கரூா்) வெங்கடேசன் (ஆயுதப்படை), காவல் ஆய்வாளா்கள் சுரேஷ் (தாந்தோணிமலை), நந்தகோபால் (போக்குவரத்து) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.