போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி


வாலாஜாப்பேட்டை அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் போதைப் பொருள் தடுப்பு குழு, நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு திட்ட சாா்பில் நடைபெற்ற பேரணியை முதல்வா் முனைவா் சே.பி.நசீம் ஜான் தொடங்கி வைத்து பேசியதாவது..
மாணவிகளிடையே சமூகப் பொறுப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இளைஞா்கள் தங்கள் உயிரையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். இது போன்ற விழிப்புணா்வு பேரணி ராணிப்பேட்டை மாவட்ட மக்களிடம் போதைப்பொருள் அபாயங்கள் மற்றும் சாலை விதிகளின் முக்கிமுத்துவத்தை வெளிப்படுத்தியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டால், இளைஞா்கள் மத்தியில் நல்ல மாற்றம் ஏற்படும் என தெரிவித்தாா்.
விழிப்பணா்வு பேரணியில் 350 மாணவிகள் பங்கேற்று,போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...