/

கரூா் சம்பவம் 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:54 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ஆம்தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது காவல் பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.