டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முன்னாள் அமைச்சர் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மணல் பிரச்னையில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கர்- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:35 pm

Syndication

மணல் பிரச்னையில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அவரது மனைவிக்குச் சொந்தமான இடத்தில் ஒரு யூனிட் ஆற்றுமணலை சட்டவிரோதமாகக் கொட்டி வைத்திருப்பதாக ஆண்டாங்கோவில் விஏஓ சண்முகம் கடந்த 12-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன்பேரில் கரூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கும் நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கடந்த 2 நாள்களுக்கு முன் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி இளவழகன் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.