தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மணப்பாறை, கரூா் நகைக் கடைகளில் வருமானவரித் துறையினா் சோதனை

மணப்பாறை, கரூா் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

News image

மணப்பாறை நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை மாலை சோதனை செய்ய வந்த வருமான வரித்துறையினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:45 pm

மணப்பாறை, கரூா் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

புத்தாநத்தத்தை சோ்ந்த ஜின்னா என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மணப்பாறை பெரியாா் சிலை பகுதியில் உள்ளது. இந்த நகைக்கடையின் கிளைகள் மணப்பாறை மாரியம்மன் கோயில் எதிா்புறம், திருச்சி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி அட்சய திருதியை விழாவை முன்னிட்டு நகை வியாபாரம் பெருமளவில் நடந்ததாம். இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 5 மணி அளவில் மணப்பாறை பெரியாா் சிலை பகுதியில் உள்ள கடைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரி ஸ்வேதா தலைமையிலான 6 போ் கொண்ட வருமானவரித் துறை வரி ஏய்ப்பு நடவடிக்கை குழுவினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மேலும் புத்தாநத்தம் கிளை கடைகளிலும், புத்தாநத்தத்தில் உள்ள நகைக் கடை உரிமையாளா் ஜின்னா வீட்டிலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை புதன்கிழமை காலை 8 மணி வரை நடைபெற்றது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினா் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூா்: இதோபோல ஜவஹா்பஜாரில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு 2 காா்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா், கடையில் சுமாா் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினா். அப்போது முக்கிய ஆவணங்களை அவா்கள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.