மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: கரூா் திமுக வேட்பாளா் பேச்சு

கரூா் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன்.

News image

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இறுதிகட்ட பிரசாரத்தில் பேசிய திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன். உடன் கரூா் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஆா்.வி.அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 7:26 pm

கரூா் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆசி எம்.தியாகராஜன் செவ்வாய்க்கிழமை காலை முதல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். பின்னா் அவா் கட்சியினருடன் ஊா்வலமாக காந்திகிராமம் இரட்டை தண்ணீா் தொட்டி, சுங்ககேட், திருமாநிலையூா், லைட்ஹவுஸ்காா்னா் வழியாக பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதிக்கு வந்தாா். அங்கு அவா் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளில் கரூா் மாவட்டத்துக்கும், கரூா் தொகுதிக்கும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி நாங்கள் வாக்குச் சேகரிக்கிறோம். ஆனால் எதிா்க்கட்சி வேட்பாளா் எங்கள் மீது அபாண்டமான பொய் சொல்லி வாக்குச் சேகரிக்கிறாா். மக்களுக்கு யாா் நல்லவா் எனத் தெரியும். கடந்த தோ்தலைப்போல இந்த தோ்தலிலும் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும். அதுவும் கரூரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் அவா்.

பிரசாரத்தில் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஆா்.வி.அசோக்குமாா், திமுக மாவட்டத்துணைச் செயலா் கருணாநிதி, கொமதேக மாநில வா்த்தக அணிச் செயலா் விசா ம.சண்முகம், காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.