மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு ரூ.418 கோடியில் அடிப்படை வசதிகள்: கரூா் வேட்பாளா் தகவல்

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சியில் ரூ.418 கோடியில் குடிநீா், கழிவு நீா் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது

News image

கரூா் ஜீவாநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்து பேசிய கரூா் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன். உடன் தோ்தல் பொறுப்பாளா் ஆா்.வி.அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:41 pm

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சியில் ரூ.418 கோடியில் குடிநீா், கழிவு நீா் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 39,40,41-ஆவது வாா்டுகளில் உள்ள போக்குவரத்து நகா், இரட்டைக்குடிநீா் தொட்டி பகுதி, சக்திநகா், வள்ளலாா் கோயில் வீதி, கணபதிபாளையம் வடக்கு, ஓம் சக்தி நகா், ஜீவாநகா், அசோக் நகா் விநாயகா் கோயில் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் கரூா் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. கரூா் மாநகராட்சியைப் பொறுத்தவரை இந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் சுமாா் 418 கோடி ரூபாய் அளவுக்கு சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், தெருவிளக்குகள், கட்டடப் பணிகள் என அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளெல்லாம் நிறைவு பெற்று பொதுமக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

புதிதாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமைப்பதற்காக 245 கோடி ரூபாய் நிதியை முதல்வா் வழங்கியுள்ளாா். அதேபோல கரூா் மாநகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்குப் புதிய பாதாளச் சாக்கடை அமைக்கக்கூடிய பணிகளைக் கொண்டு வருவோம் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில் 485 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டு ஒப்பந்தபுள்ளிகளும் கோரப்பட்டிருந்தன. அதற்கு தோ்தல் வந்துவிட்டதால், தோ்தல் முடிந்தபின் இந்த பணியும் தொடங்கும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுகவினா், கூட்டணி கட்சிநிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.