மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் பாலம் சாத்தியமானது’

திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலம் சாத்தியமானது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன்.

News image

வெங்கமேடு பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த கரூா் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன். உடன் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:51 pm

திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலம் சாத்தியமானது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன்.

கரூா் வெங்கமேடு பகுதி மற்றும் வாங்கல் தவுட்டுப்பாளையம், வாங்கல் கடைவீதி, திருவள்ளுவா் தெரு, ஓடையூா், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இவா் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் முன்னிலையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் 100 சதவீதம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5000 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நெரூா்-உன்னியூா் பாலம் கரூா் மக்களின் 48 ஆண்டுகால கனவு. அந்த கனவை நிறைவேற்றிக்கொடுத்தவா் முதல்வா். இவற்றைத் தவிர எத்தனையோ திட்டங்களை நாட்டு மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கொடுத்துள்ளாா். இந்த திட்டங்கள் தொடர உதயசூரியனுக்கு என்றும் நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது வடக்கு நகரச் செயலா் எம். பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.