கரூா் காசிம் தெருவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுக மற்றும் அதிமுகவினா் ஒரேநேரத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மற்றும் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளா் வழக்குரைஞா் ஷேக்பரித் உள்ளிட்ட அதிமுகவினா் திரளாக நின்றுகொண்டு, அதிமுக ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
இதேபோல, திமுக சாா்பில் நகரச் செயலாளா் வி.ஜி.எஸ்.குமாா் தலைமையில் திமுகவினா் திரளாக பங்கேற்று, இஸ்லாமியா்களிடம் திமுக ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துண்டுப் பிரசுரமாக வழங்கி வாக்குகள் சேகரித்தனா்.
திமுகவினரும், அதிமுகவினரும் தத்தமது ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து ஒரே நேரத்தில் முழக்கமிட்டவாறு வாக்குகள் சேகரித்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக, திமுக, அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத மாவட்டங்கள்

கன்னியாகுமரியை தக்கவைத்தது அதிமுக

விராலிமலை: கடும் போட்டியில் திமுக - அதிமுக

இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சிக்கு அதிமுக ஆட்சியே காரணம் - எடப்பாடி கே. பழனிசாமி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



