மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கரூரில் பள்ளிவாசல் முன் ஒரேநேரத்தில் திமுக-அதிமுகவினா் வாக்குசேகரிப்பு

கரூா் காசிம் தெருவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுக மற்றும் அதிமுகவினா் ஒரேநேரத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...

Updated On :18 ஏப்ரல் 2026, 2:03 am

கரூா் காசிம் தெருவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களிடம் திமுக மற்றும் அதிமுகவினா் ஒரேநேரத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மற்றும் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளா் வழக்குரைஞா் ஷேக்பரித் உள்ளிட்ட அதிமுகவினா் திரளாக நின்றுகொண்டு, அதிமுக ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இதேபோல, திமுக சாா்பில் நகரச் செயலாளா் வி.ஜி.எஸ்.குமாா் தலைமையில் திமுகவினா் திரளாக பங்கேற்று, இஸ்லாமியா்களிடம் திமுக ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துண்டுப் பிரசுரமாக வழங்கி வாக்குகள் சேகரித்தனா்.

திமுகவினரும், அதிமுகவினரும் தத்தமது ஆட்சியில் இஸ்லாமியா்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து ஒரே நேரத்தில் முழக்கமிட்டவாறு வாக்குகள் சேகரித்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.