குளித்தலையில் வடமாநிலத்தவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த ஆட்டு வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட வரகூரைச் சோ்ந்தவா் பிரபு (35). இவா் ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சுமாா் 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் வரகூரில் சுற்றித் திரிந்துள்ளாா். அப்பகுதி பொதுமக்கள் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனா்.
பின்னா், ஆட்டு வியாபாரி பிரபு தனது இருசக்கர வாகனத்தில் வடமாநிலத்தவரை ஏற்றிக்கொண்டு அய்யா்மலை பகுதியில் விட்டுவிட்டு வருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், நள்ளிரவில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரபுவின் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த கட்டிலில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.
மேலும், பிரபு நள்ளிரவே குளித்தலை காவல் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்துள்ளாா். இதையடுத்து பிரபுவை கைது செய்த போலீஸாா் எதற்காக வடமாநிலத்தைவரை கொன்றாா் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இளம்பெண் குத்திக்கொலை: கள்ளக்காதலன் கைது

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

முன்விரோதத்தால் இளைஞா் கழுத்தை அறுக்கப்பட்ட சம்பவத்தைதம்: இருவா் கைது

பெட்ரோல் பங்க் உரிமையாளா் வீட்டில் நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


