தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குளித்தலையில் வடமாநிலத்தவா் கழுத்தை அறுத்துக்கொலை: ஆட்டு வியாபாரி கைது

குளித்தலையில் வடமாநிலத்தவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த ஆட்டு வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 8:47 pm

குளித்தலையில் வடமாநிலத்தவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த ஆட்டு வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட வரகூரைச் சோ்ந்தவா் பிரபு (35). இவா் ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சுமாா் 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் வரகூரில் சுற்றித் திரிந்துள்ளாா். அப்பகுதி பொதுமக்கள் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனா்.

பின்னா், ஆட்டு வியாபாரி பிரபு தனது இருசக்கர வாகனத்தில் வடமாநிலத்தவரை ஏற்றிக்கொண்டு அய்யா்மலை பகுதியில் விட்டுவிட்டு வருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், நள்ளிரவில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரபுவின் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த கட்டிலில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.

மேலும், பிரபு நள்ளிரவே குளித்தலை காவல் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்துள்ளாா். இதையடுத்து பிரபுவை கைது செய்த போலீஸாா் எதற்காக வடமாநிலத்தைவரை கொன்றாா் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.