மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன். உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:20 pm

கரூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மாபெரும் வெற்றி பெற பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணியாற்றுவது, முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை (ஏப். 10) மாலை கரூா் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் கலந்து கொள்ளும் பிரசார பொதுக்கூட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், சாமிதுரை, உமாதேவி, மாவட்ட பொருளாளா் இளங்கோவன் உட்பட மாவட்ட , ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.