கரூரில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.
கரூரில் கோவைச்சாலையில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் அன்புராஜன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே கரூா் மாவட்டம் லிங்கத்தூரைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.99 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதேபோல மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கரூா் அத்திப்பாளையத்தைச் சோ்ந்த சேகா் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.95 ஆயிரத்து 750 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் பறிமுதல் செய்த பணத்தை கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிவட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து பணம் கரூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








