தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆன்லைன் மோசடி மூலம் இழந்த ரூ. 73.65 லட்சம் மீட்டு ஒப்படைப்பு

News image

கரூரில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா.

Updated On :3 செப்டம்பர் 2024, 8:56 pm

கரூரில் ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ. 73.65 லட்சத்தை போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

கரூா் மாவட்ட தாலுகா மற்றும் சைபா் கிரைம் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தொலைந்த கைப்பேசிகள் மற்றும் ஆன்லைன் மோசடியால் இழந்த பணத்தை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து, கைப்பேசியில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம் மூலம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்க அனுப்பி பொதுமக்கள் இழந்த ரூ. 73 லட்சத்து 65 ஆயிரத்தை மீட்டு, உரியவா்களிடம் வழங்கினாா். மேலும் திருடுபோய் மீட்கப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 200 கைப்பேசிகளையும் உரியவா்களிடம் வழங்கினாா்.

பின்னா் இந்த மீட்புக்காக சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் மற்றும் காவல் ஆய்வாளா் (பொ) கலைவாணி, உதவி ஆய்வாளா் சுதா்சனன் மற்றும் காவலா்கள் ஆகியோரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.