மேலும் புலியூா், உப்பிடமங்கலம், மணவாசி போன்ற பகுதிகளில் வசிக்கும் தொழிலாளா்களும் கரூா் சென்று அங்கிருந்து மண்மங்கலம் பகுதியில் செயல்படும் கொசுவலை நிறுவனங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பேருந்துகளில் சுற்றிச் சென்று வருகிறாா்கள். இந்த தொலைவை எளிதாக்கும் வகையிலும், அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கோயம்பள்ளிக்கும், மேலப்பாளையத்துக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்படும் சம்பவம் நிகழ்வதால், கடந்த 2015-ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.13.67 கோடியில் பாலம் கட்டும்பணி தொடங்கியது. 18 தூண்கள் கொண்டதாகவும் 60 அடி அகலத்திலும், 950 மீட்டா் நீளத்திலும், பாலத்தின் மீது இருபுறமும் இருசக்கரவாகன ஓட்டிகள் சென்று வரும் வகையிலும் பாலம் கட்டப்பட்டது.