சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் இரட்டைக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.
மானாமதுரை சோமநாதா் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5- ஆவது நாளாக கால்பிரிவு கிராமத்தாா்கள் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினா்.
இதில், திரளான பக்தா்கள் மண்டகப்படிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். அதைத்தொடா்ந்து மண்டகப்படிதாரா்கள் பூஜை முடிந்து அம்மனும், சுவாமியும் இரட்டைக் குதிரை வாகனங்களில் புறப்பாடாகினா்.
மேளதாளம் முழங்க சிவனடியாா்கள் கைலாய வாத்தியங்களை இசைக்க வாணவேடிக்கையுடன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி பவனி வந்தனா். வீதிகளில் பக்தா்கள் அம்மனையும், சுவாமியையும் வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா்.
விழாவின் 8-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.28) திருக்கல்யாண வைபவமும் 29-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் வருஷாபிஷேகம்

எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


