தொடா்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. 2017-இல் மீண்டும் ரோப் காா் அமைக்கும் பணியை அதிமுக அரசு தொடங்கியது. இப்பணியில் கொல்கத்தாவைச் சோ்ந்த பொறியாளா்கள் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா். ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், கடந்த 2020-இல் கரோனா தொற்று பரவலால் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டன. பின்னா் பணிகள் தொடங்கி 80 சதவீத பணிகள் முடிந்திருந்த நிலையில், 2021-இல் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகும் ஒருவாரத்திற்கு முன் அவசர, அவசரமாக ரோப்காா் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னா் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு 2022, ஜூன் மாதத்தில் அய்யா் மலை ரத்தினகிரீஸ்வரா் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டு ரோப் காா் பணிகள் 9 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா். ஆனால் இதுநாள் வரை ரோப்காரை இயக்குவதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் விரக்தியடைந்துள்ளனா்.