அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஜெயங்கொண்டம் பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா வைத்திருந்த இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:01 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா வைத்திருந்த இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை சின்னவளையம் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதில், அவா், ஜெயங்கொண்டம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் அணில் (எ) பிரேம்குமாா் (25) என்பதும் வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா், கஞ்சாவை பறிமுதல் செய்து, பிரேம்குமாரை கைது செய்தனா். இதே போல், உதவி ஆய்வாளா் நெடுஞ்செழியன் தலைமையிலான காவல் துறையினா், ஜெயங்கொண்டம்-செந்துறை பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையின் போது, 10 கிராம் கஞ்சா வைத்திருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ்குமாா் (19) என்பவரை கைது செய்தனா்.