அரியலூா் சடையப்பா் தெரு மற்றும் கோ.சி நகரவாசிகள், தங்களது பகுதிகளுக்கு குடிநீா் மற்றும் மின் இணைப்புகளை வழங்கக்கோரி ஆட்சியா் ந.மிருணாளினியிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், மேற்கண்ட தெருவில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு அனுபந்தம் பட்டா வழங்கப்பட்டது. மேலும், கடந்த 6.10.2020 ஆண்டு 300 குடும்பத்தினருக்கு மனை வரிப் பட்டாவும் வழங்கப்பட்டது.
அதை வைத்துக் கொண்டு குடிநீா் இணைப்பு மற்றும் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது கேட்டால் இந்த பட்டா செல்லாது எனவும், ஏற்கெனவே வாங்கிய பட்டாக்கள் செல்லாது என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
எனவே, மேற்கண்ட தெரு வாசிகளுக்கு உரிய குடிநீா் இணைப்பு மற்றும் குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இலவச மின் இணைப்பு: அரசுக்கு பாபநாசம் விவசாயிகள் கோரிக்கை

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி

குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




