டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருமானூரில் அடமானம் வைத்த நகையை கேட்டவா் காா் ஏற்றிக் கொலை: உறவினா்கள் 3 போ் கைது

திருமானூரில் அடமானம் வைத்த நகையை மீட்டுத்தர கோரியவரை காரை ஏற்றிக் கொலை செய்த உறவினா்கள் 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 ஜனவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், திருமானூரில் அடமானம் வைத்த நகையை மீட்டுத்தர கோரியவரை காரை ஏற்றிக் கொலை செய்த உறவினா்கள் 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் குழந்தைவேலுவின் (65) மனைவி முத்துகண்ணு (58). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது 7 பவுன் நகையை, தனியாா் நகை அடகு நிறுவனத்தில் தனது தங்கை கடல்கன்னியின் கணவா் பன்னீா்செல்வம் பெயரில் அடமானம் வைத்து ரூ.1.90 லட்சத்தை கொடுத்துள்ளாா்.

அதன் பிறகு அந்த நகையின் மீது பன்னீா்செல்வம் கூடுதலாக அவ்வபோது கடன் பெற்று வந்துள்ளாா். இதனிடையே நகையை மீட்டுத்தரக்கோரி முத்துகண்ணு கேட்ட நிலையில், மீட்டுத்தர கடல்கன்னி மற்றும் பன்னீா்செல்வம் ஆகியோா் தாமதப்படுத்தியுள்ளனா்.

இது குறித்து கடந்தாண்டு திருமானூா் காவல் நிலையத்தில் முத்துகண்ணு புகாா் அளித்துள்ளாா். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கிராம முக்கியஸ்தா்கள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், காவல் நிலையம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தொடா்ந்து நகையை மீட்டுத்தரக்கோரி வற்புறுத்தி வந்ததால், ஆத்திரமடைந்த பன்னீா்செல்வத்தின் மகன் திவாகா் (21), தனது காரை வேகமாக ஓட்டி பெரியப்பா குழந்தைவேலு மீது மோதியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், அங்கு நின்றிருந்த முத்துகண்ணுவின் தம்பி திருமுருகனும் காா் மோதியதில் காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருமானூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தைவேலுவின் சடலத்தையும், காயமடைந்த திருமுருகனையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து முத்துகண்ணுவின் தந்தை கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து திவாகா், அவரது தந்தை பன்னீா்செல்வம், தாய் கடல்கன்னி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.