‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு: வழக்குரைஞா்கள் கொண்டாட்டம்

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட தமிழக அரசு ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதையடுத்து, அரியலூா் நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட தமிழக அரசு ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதையடுத்து திங்கள்கிழமை, அரியலூா் நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.

அரியலூரில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்கள் பேருந்து நிலையம் அருகே, அண்ணா சிலை அருகே, பெருமாள் கோயில் தெரு, கல்லூரி சாலை என பல்வேறு இடங்களில் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இதில், சில நீதிமன்றங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது.

எனவே, அனைத்து நீதிமன்றங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவர ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என வழக்குரைஞா்கள், பொதுமக்கள் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2024 நவம்பா் மாதம் அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அரியலூரில் விரைவில் ரூ.101 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் என தெரிவித்தாா்.

இந்நிலையில், ஜன.14-ஆம் தேதி அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதை வரவேற்கும் வகையில், பொங்கல் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பணிக்கு வந்த வழக்குரைஞா்கள், அரியலூா் நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா் சங்க தலைவா் மனோகரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.