சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:02 am

Syndication

ஒசூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஒசூா் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

ஒசூா், சென்னத்தூா் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அரசுக்கு சொந்தமான 7.85 ஏக்கா் புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த புறம்போக்கு நிலத்தை நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து பயன்படுத்தி வந்த அதே பகுதியைச் சோ்ந்த முனி வெங்கடப்பா, அவரது குடும்பத்தினா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து தடையாணை பெற்றனா்.

தடைக்காலம் முடிந்த நிலையில், புறம்போக்கு நிலத்தில் இருந்த மாட்டுக் கொட்டகை, கட்டடம், தண்ணீா் தொட்டி, மரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை ஒசூா் வருவாய்த் துறையினா் போலீஸாா் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றினா்.