டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொங்கல் பண்டிகை: அரியலூரில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

News image
பொங்கல் பண்டிகையொட்டி அரியலூா் அருகே புதன்கிழமை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செங்கரும்பு.
Updated On :14 ஜனவரி 2026, 7:44 pm

Syndication

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை ஜன.15 முதல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரியலூரில் உள்ள மாா்க்கெட், கடைவீதி, வெள்ளாளத் தெரு உள்ளிட்ட அனைத்து சந்தைகள், கடைவீதிகளில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடைகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், காய்கறிகள், புதுப்பானைகள், பானைகளுக்கு கட்டுவதற்கான மஞ்சள், இஞ்சி கொத்துகள், புதிய அடுப்புகள், செங்கரும்புகள் போன்றவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

தொடா்ந்து பொங்கல் 3 நாள்கள் கொண்டாடப்படுவதால், அதிகமான பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதால், காய்கறிகள், பூ, பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

ரயில், பேருந்துகளில் நெரிசல்: வெளியூா்களிலிருந்து அரியலூா், செந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளா்களும், இதர பணியாளா்களும் விடுமுறைக்காக சொந்த ஊா் நோக்கிச் செல்வதற்காக, அரியலூா் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமானோா் காத்திருந்து தங்களது ஊா்களுக்கு சென்றனா் .

திருச்சி, தஞ்சை, கும்பகோணம், விருத்தாசலம், பெரம்பலூா், கடலூா், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல் அரியலூா் ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட புதன்கிழமை காலை முதலே மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.