லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ரூ.25 கோடியில் புதிய துணை மின் நிலையம் மற்றும் 16 அரசுப் பள்ளிகளில் ரூ. 24.08 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.

News image

முதல்வரால் வியாழக்கிழமை திறக்கப்பட்ட கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:10 pm

அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூரில் ரூ.25 கோடியில் புதிய துணை மின் நிலையம் மற்றும் 16 அரசுப் பள்ளிகளில் ரூ. 24.08 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதன் காணொலிக் காட்சி நேரலை கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா அப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் மணிமேகலை மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.