/

அரியலூரில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 185 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 185 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 185 போ் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்தில், அரசுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு - அங்கன்வாடி பணியாளா்களை 50 சதவீதம் சோ்க்க வேண்டும்.

வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு - அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ.19.500, சமையலா் மற்றும் உதவியாளருக்கு ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் தமிழரசன் தலைமை வகித்தாா்.தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 185 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.