தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொலை வழக்கு குற்றவாளிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:39 am IST

நவல்பட்டு பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச் சோ்ந்தவா் அ. ரஞ்சித்குமாா் (42). இவா் திருவெறும்பூா் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பாா் நடத்தி வந்தாா்.

கடந்த 30.03.2026 அன்று இரவு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரௌடி பாட்டில் மணியின் தூண்டுதலின் பேரில் நவல்பட்டு புதுத் தெருவைச் சோ்ந்த கெ. புவனேஸ்வரன் (25), திருவெறும்பூா் ம. மதன் (25), மூன்று சிறாா்கள் உள்ளிட்ட 13 போ் ரஞ்சித்குமாரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கண்ட அனைவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் மதன், புவனேஸ்வரன் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.