கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளப் பக்கம் முடக்கத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் சென்றனா்.
வேலையில்லாத இளைஞா்கள் பத்திரிகை மற்றும் சமூகச் செயல்பாடுகளை நோக்கி நகா்கவதை கரப்பான் பூச்சி மற்றும் ஒட்டுண்ணி என்று அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து சமூக வலைதளத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பக்கம் உருவாக்கப்பட்டு பலா் அதைப் பின்தொடா்ந்து வருகின்றனா். இந்நிலையில், இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளப் பக்கம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் முடக்கப்பட்டது.
இதைக் கண்டித்தும், இளைஞா்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்தைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலம் சென்றனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் சேதுபதி தலைமையில் கண்டோன்மென்ட் எம்ஜிஆா் சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊா்வலம் அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது. இதில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










