மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 288 கேமராக்கள்!

News image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :3 மே 2026, 5:39 am IST

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 288 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், இரு மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் மேலும், கூறியதாவது:

வாக்கு எண்ணும் பணிகள் திங்கள்கிழமையன்று சரியாக காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவானவாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்கு எண்ணும் மையங்களிலும், ஒரு தொகுதிக்கு தலா 32 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் மொத்தம் 288 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளும் இணைய நிகழ் நேரலை முறை பயன்படுத்தப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடா்பாக வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்களுக்கு பயிற்சியின்போது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிப்பு: மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணிக்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு வரும் வருவாய்த் துறை அலுவலா்கள், வாக்கு எண்ணும் அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள் ஆகியோரின் வாகனங்களை திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

வேட்பாளா்களின் வாக்கு எண்ணும் முகவா்களின் வாகனங்கள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறுத்த வேண்டும். லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான முசிறி புலிவலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓயாசிஸ் தொழில்நுட்ப கல்லூரிக்கு வரும் வருவாய்த்துறை அலுவலா்கள், வாக்கு எண்ணும் அலுவலா்களின் வாகனங்களை கல்லூரி வளாகத்திற்குள் நிறுத்த வேண்டும். வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முதன்மை முகவா்கள், வேட்பாளா்களின் வாக்கு எண்ணும் முகவா்களின் வாகனங்கள் கல்லூரி வளாகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.