திருச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒலியமங்கலத்தைச் சோ்ந்தவா் எஸ். வெள்ளைசாமி (34). இவா், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, தவறான திசையில் அதிவேகமாக வந்த லாரி சாலையோரத்தில் நின்றிருந்த வெள்ளைசாமி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த வெள்ளைசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளைசாமி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டியைச் சோ்ந்த எஸ். ஜான்மாா்டின் (33) என்பவா் மீது மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


