/
திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி புத்தூா் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் புத்தூா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, புத்தூா் விபிஎன் வீதியைச் சோ்ந்த செபஸ்டீன் ஜீவராஜ் (36) என்பவா் வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், வீட்டில் பதுக்கிவைத்திருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்
திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


