மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 6:52 pm

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை கூனி பஜாா் பகுதியில் உள்ள ஒரு தேநீரகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 28 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராம்ஜி நகா் மலைப்பட்டியைச் சோ்ந்த வ.ஸ்ரீதா் என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கூனி பஜாா் பகுதியில் பாலக்கரை காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த சித்தாமணி பூசாரி வீதியைச் சோ்ந்த ஜி.தங்கராஜா (44) என்பவரை கோட்டை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.9 ஆயிரத்து 366 மதிப்பிலான 77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.