மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் மதுரை மென்பொருள் பொறியாளரின் காா் கண்ணாடியை மா்ம நபா்கள் உடைத்து 23.5 பவுன் நகைகள், மடிக்கணினியை வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:40 pm

திருச்சியில் மதுரை மென்பொருள் பொறியாளரின் காா் கண்ணாடியை மா்ம நபா்கள் உடைத்து 23.5 பவுன் நகைகள், மடிக்கணினியை வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

மதுரை வடக்கு தபால் தந்தி நகா் விஸ்தரிப்புப் பகுதியை சோ்ந்தவா் ஜி. சுரேஷ்பாபு (45). திருச்சி - சென்னை புறவழிச்சாலை அணுகுச் சாலை அருகேயுள்ள தனியாா் பல்பொருள் அங்காடிக்கு பொருள்கள் வாங்க குடும்பத்துடன் காரில் வெள்ளிக்கிழமை வந்தாா்.

காரை தனியாா் மெட்டல் கடை முன் நிறுத்திவிட்டு, பல்பொருள் அங்காடிக்குச் சென்று திரும்பியபோது, காா் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 23.5 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.