லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம்

News image
Updated On :20 மார்ச் 2026, 1:10 am

யுகாதி என்னும் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாளுக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

விழாவையொட்டி வியாழக்கிழமை காலை நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டாா். அவருடன் ஆழ்வாா்களும் எழுந்தருளி, ஸம்வத்ஸராதி புறப்பாடு கண்டருளினா். தொடா்ந்து சந்தனு மண்டபத்தில் நம்பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. நம்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். புதன்கிழமை அமாவாசையன்று சதுா்த்தசி திதி கலந்து இருந்ததால் நம்பெருமாள் புறப்பாடு மற்றும் திருமஞ்சனம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.