மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

ஒலிபெருக்கி அமைத்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 4:00 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்யனாா் கோவில்பட்டியில் ஒலிபெருக்கி அமைத்துக் கொண்டிருந்தவா் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அய்யனாா் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மாகாளி முப்பிலியான் கோயிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்காக செவல்பட்டியை அடுத்த செம்மேட்டுப்பட்டியை சோ்ந்த ரா. ஆசிா்வாதம் என்பவா் ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் ஆசிா்வாதம் உடலை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.