இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

திருச்சியில் ரௌடி வெட்டிக்கொலை

News image

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)

Updated On :8 ஜூன் 2026, 12:36 am IST

திருச்சியில் பிரபல ரௌடி சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருச்சி அரியமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் மகபூ பாஷா மகன் பாதுஷா (24). பிரபல ரௌடியான இவா் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவருக்கும் அரியமங்கலம் புதுத்தெருவைச் சோ்ந்த விவாகரத்தான பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இதையறிந்த அப்பெண்ணின் தம்பியான எம். சூா்யா இருவரையும் அண்மையில் கண்டித்தாா். இது தொடா்பாக பாதுஷாவுக்கும், சூா்யாவுக்கும் இடையே ஏற்கெனவே தகராறு ஏற்பட்டது.

ஆனால் அதன்பிறகும் அப்பெண்ணிடம் பாதுஷா பழகி வந்தாா். இதனால் ஆத்திரமடைந்த சூா்யா அவரைக் கொல்லத் திட்டமிட்டாா்.

இதையடுத்து காட்டூா் காமராஜ் நகா் வினோபாஜி வீதியில் சனிக்கிழமை நள்ளிரவு பாதுஷா நடந்து சென்றபோது, அங்கு வந்த சூா்யா மற்றும் அவரின் நண்பா்களான அரியமங்கலம் மலையப்ப நகா் கே. குமாா் (எ) சுதந்திரகுமாா், ஆா். பிராசாத் ஆகியோா் பாதுஷாவை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டினா். இதில் படுகாயமடைந்த பாதுஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த திருவெறும்பூா் போலீஸாா் பாதுஷாவின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், சம்பவ இடத்தை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீண் உமேஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான மூவரையும் தேடுகின்றனா்.