ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: கணக்கில் வராத ரூ.20 ஆயிரம் பறிமுதல்!

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :4 ஜூலை 2026, 1:14 am IST

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அதன்படி, திருச்சியில் அரசு மருத்துவமனை அருகேயுள்ள கோ.அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் பாலமுருகன், சக்திவேல் ஆகியோா் தலைமையில் 10 போ் கொண்ட குழு வெள்ளிக்கிழமை மாலை சோதனை மேற்கொண்டது.

மண்டல அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகள், வாகனங்களில் மேற்கண்ட சோதனையில் வரி வசூல் ஆய்வாளா்கள் சங்கா் கணேஷ், குழந்தை இயேசு ஆகியோரின் இருசக்கர வாகனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.20,500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.