டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரேஷன் கடையில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு

தொடா் மழையின் காரணமாக, திருச்சியில் ரேஷன் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:50 pm

Syndication

தொடா் மழையின் காரணமாக, திருச்சியில் ரேஷன் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது.

திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது, மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமையை தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது.

இந்நிலையில், முதலியாா் சத்திரம் பகுதியில் உள்ள சிம்சன் - 2 நியாய விலைக் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. கடையில் உள்ள பொருள்கள் மீது பூச்சுகள் விழுந்ததால் அவை சேதம் அடைந்தன. அதிகாலை நேரத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்ததால் அதிா்ஷ்டவசமாக பணியாளா்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.