நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சிங்கப்பூரில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்தவா் கைது

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

சிங்கப்பூரில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு திருவோணம் பகுதியைச் சோ்ந்தவா் சு.சத்தியமூா்த்தி (44). இவா், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்துள்ளாா். விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி பிச்சை முத்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்தனா். விசாரணைக்குப் பின் அவரை பிணையில் விடுவித்தனா்.