பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:15 pm

Syndication

போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கழனிகுடி பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.கோபாலகிருஷ்ணன் (46). இவா், மலிண்டோ விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளாா்.

அப்போது, விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில், அவா் போலி ஆவணங்கள் மூலம் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரித்து, பின்னா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனா்.